Wednesday, November 11, 2009

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் SALVATION ARMY



ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்பது அறிஞர் அண்ணாவின் வாக்கு .அதைப் போன்று SALVATION ARMY எனப்படும் அமைப்பு இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏழைகளுக்கும், தேவையிலிருப்பவர்களுக்கும் உதவி செய்து வருகிறது.

ஏழைகளுக்கு உதவி செய்யும் நல்லெண்ணத்தில் 1865 ல் இங்கிலாந்தின் கிழக்கு லண்டன் பகுதியில் வில்லியம்பூத் மற்றும் கேதரின் பூத் என்னும் தம்பதிகளால் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவ நிறுவனம் தான் இரட்சணிய சேனை என்றழைக்கப்படும் SALVATION ARMY.

இன்று 118 நாடுகளில் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது Salvation Army. குறிப்பாக இயற்கை பேரழிவுகளிலும், பெரும் விபத்துகளிலும் தங்களது உதவிக்கரங்களை நீட்ட SA எப்போதுமே தவறியதில்லை.

2001 ல் அமெரிக்காவில், உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போதும் Red Cross க்கு இணையாக நின்று நிவாரணப்பணிகளை மேற்கொண்டதும் Salvation Army தான்.

2004 ல் இந்தியா உட்பட்ட தெற்காசிய நாடுகள் ஆழிப்பேரலையின் (சுனாமி) தாக்குதலுக்கு உள்ளான போதும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டிருக்கிறது.



குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகளை ஏற்படுத்தியதோடு சாலையையும் சீரமைத்துக் கொடுத்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டது. அந்த சாலைக்கு அரசாங்க அனுமதியுடன் வில்லியம் பூத் சாலை எனவும் பெயரிடப்பட்டது.

தமிழகத்திலும் கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூகப்பணி என பல பணிகளை மேற்கொண்டுவருகிறது. மருத்துவப்பணியில் சொல்லும்படியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரத்தில் காதரீன் பூத் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

காலங்காலமாக சிறந்து விளங்கிவரும் உலகின் பத்து பிரபல அமைப்புகளை 2004 ல் Booz Allen Hamilton என்ற நிறுவனம் பட்டியலிட்டது. அதில் ஆக்ஸ்ஃபோர்டு,ஒலிம்பிக் விளையாட்டுகள், சோனி நிறுவனம்,ரோலிங் ஸ்டோன்ஸ் இவைகளின் வரிசையில் Salvation Army ம் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்கள் அறிய
http://en.wikipedia.org/wiki/Salvation_army
http://www.salvationarmy.org/ihq/www_sa.nsf
http://www1.salvationarmy.org/ind

http://en.wikipedia.org/wiki/Catherine_Booth_Hospital

நன்றி
SA,
Gee Jo Sam,

CBH - Gershom


Sunday, November 8, 2009

ROCK THUNDER இடம் எச்சரிக்கையாயிருங்கள்

ஆர்குட் எத்தனை அற்புதமானதோ அத்தனை ஆபத்தும் நிறைந்தது என்பதற்கு கடந்த சில நாட்களாக நிகழும் நிகழ்வுகளே சாட்சி.

ஆர்குட் வழியாக கிறிஸ்தவ அன்பர்களுக்கிடையேயான அன்பை முறிக்கவும், சபைகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தவும் முயன்று வரும் கயவர்களிடம் இருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பாக நாகர்கோவில் வட்டம் இலந்தையடி கிராமத்தைச் சார்ந்த ஒரு விஷமி THE ROCK THUNDER என்ற பெயரில்(ஒன்றல்ல THE ROCK THUNDER-PAROSH, THE ROCK THUNDER MINISTRY, THE ROCK THUNDER-SHEPHATIAH, THE ROCK THUNDER-ARAH, THE ROCK THUNDER PAHATH என ஐந்து பெயர்களில்) இரட்சணிய சேனைக்கும், சேனை பணிகளுக்கும் எதிராக அவதூறை பரப்பி வருகிறான்.

அவனது ஊழியம் நேரடியாக பரலோகத்திருந்து வருகிறது என்பது அவன் பிரச்சாரம். அது மட்டுமல்லாமல் அவன் தீர்க்கத்தரிசனம் வேறு உரைக்கிறானாம்.

நண்பர் ஒருவருடனான நேற்றைய உரையாடலின் போது... இரட்சணிய சேனை ஊழியக்காரர் ஒருவனின் மகன் இருசக்கர வாகன விபத்தில் விரைவில் பலியாவார் என கடவுள் அவனிடம் கூறியதாகத் தெரிவித்திருக்கிறான்.

அந்த விஷமியிடம் இரட்சணிய சேனை ஊழியக்காரர்களின் பிள்ளைகளும் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் இடிமுழக்கம் என அறியப்படும் ROCK THUNDER ன் ஊழியங்களைக் குறித்து நான் நன்கு அறிவேன். மது அருந்தி விட்டு போதகம் செய்து வரும் அவர்கள் நடவடிக்கைகளையும் அறிவேன்.

எச்சரிக்கையாயிருங்கள்.
அவனது ஆர்குட் பக்கத்தை காண இங்கே சொடுக்கவும்