Tuesday, October 21, 2008

உம் முன் நிற்க தேவே-Before Thy Face Dear Lord

Before Thy Face Dear Lord ESB # 409
In Tamil: உம் முன் நிற்க தேவே

சரணம்-1

உன் முன் நிற்க தேவே

என் நிலை காட்டுமே

நான் பாடிடும் எக்கேள்விக்கும்

விடை அளிப்பேனே

பல்லவி

கெஞ்சும் வேளையில்

உம் கிருபையால்

நெஞ்சின் குறை யாவையும்

நேரில் காட்டும் மீட்பா

சரணம்-2

முன் போல் நான் இப்போதும்

சன்மார்க்க ஜீவியம்

உம் ஆவி நிறைந்தவனாய்

பின்பற்றி வாரேன் நான்-கெஞ்சும்

சரணம்-3

உம் முன் செய்கையிலும்

என் உள்ளம் சுத்தமாய்

எந்த நாளும் என் இரட்சிப்பை

நான் காத்துக் கொண்டேனா-கெஞ்சும்

சரணம்-4

முன்னுள்ள வைராக்யம்

இந்நாளிலுமுண்டா

உம் ஊழியத்தில் இன்னும் நான்

இன்பம் காண்கிறேனா-கெஞ்சும்

சரணம்-5

துன்பம் இல்லா இடம்

தேடி நான் செல்வேனா

வன் போர்தனில் நிலையாது

மாறுபவன் நானா-கெஞ்சும்

No comments: