Tuesday, October 21, 2008

நீ உயிர் பெறவே

சரணம்-1

நீ உயிர் பெறவே

நான் இரத்தம் சிந்தினேன்

நீ மீட்கப்படவே

நான் விலையாகினேன்

என் ஜீவன் நான் தந்தேன் தந்தேன்

நீ என்னத்தை தந்தாய்

சரணம்-2

சதாகால இன்பம்

நீ பெற்று வாழ்ந்திட

இவ்வுலகில் துன்பம்

வந்தேன் சகித்திட

அநேகாண்டாய் பட்டேன் பாடு

ஓர் நாள் நீ தந்தாயா

சரணம்-3

மகத்வ மாளிகை

உனக்காய் நான் விட்டேன்

உலகின் வாதையை

உனக்காய் சகித்தேன்

தந்தேனே நான் என்னை என்னை

நீ கொணர்ந்தாய் எதை

சரணம்-4

உன் ஜீவன் தத்தம் செய்

உன் நேச மீட்பர்க்காய்

உலக வாழ்வு பொய்

ஜீவி நித்யத்திற்காய்

குப்பையாய் உன் எல்லாம் தந்து

அவரைப் பின் செல்லு

No comments: