Tuesday, October 21, 2008

நம்பிடுவேன் எந்நாளும்-Simply Trusting Everyday

நம்பிடுவேன் எந்நாளும் - Simply Trusting Everyday

சரணம்-1

நம்பிடுவேன் எந்நாளும்

துன்பம் துயர் ஆனாலும்

எந்தன் ஏசு நாதனை

அந்தம் மட்டும் பற்றுவேன்


பல்லவி

நேரங்கள் பறந்தாலும்

நாட்கள் தான் கடந்தாலும்

என்ன தான் நேரிட்டாலும்

ஏசுவையே நம்புவேன்

சரணம்-2

ஏழை எந்தன் நெஞ்சிலே

வாழ்கிறார் சுத்தாவி தான்

பாதை காட்டி எந்தனை

பாதுகாத்துக் கொள்கிறார்-நேரங்கள்


சரணம்-3

பாடுவேன் என் பாதையில்

பிரார்த்திப்பேன் என் தொல்லையில்

கேடு வரும் போதும் நான்

கிட்டி ஏசை நம்புவேன்-நேரங்கள்

சரணம்-4

ஜீவிக்கின்ற காலமும்

சாகும் அந்த நேரமும்

சேரும் மோட்ச வீட்டிலும்

ஏசுவையே நம்புவேன்-நேரங்கள்

No comments: