Tuesday, October 21, 2008

உம் குருசண்டை-Jesus Keep Me Near The Cross

Jesus Keep Me Near The Cross ESB # 115

In Tamil:உம் குருசண்டை இயேசுவே

சரணம்-1

உம் குருசண்டை இயேசுவே

வைத்தென்னைக் காத்திடும்

கல்வாரி ஊற்றினின்று

பாயுது ஜீவாறு

பல்லவி

சிலுவை சிலுவை

என்றும் என் மகிமை

அக்கரை சேர்ந்தென் ஆத்மா

இளைப்பாறு மட்டும்

சரணம்-2

குருசண்டை நின்ற என்னை

கண்டார் இயேசு அன்பால்

வீசிற்றென்மேல் ஜோதியே

காலை விடிவெள்ளி-சிலுவை

சரணம்-3

தேவ ஆட்டுக்குட்டியே

தாரும் குருசின் காட்சி

அதன் நிழலிலென்றும்

செல்ல துணை செய்யும்-சிலுவை

சரணம்-4

காத்திருப்பேன் குருசண்டை

நம்பி நிலைத்தென்றும்

நதிக்கப்பால் பொன்கரை

நான் சேர்ந்திடும் மட்டும்-சிலுவை

No comments: