Tuesday, October 21, 2008

தேவா என்னை-Lord I Make A Full Surrender

Lord I Make a Full Surrender

SA ESB # 504

சரணம்-1

தேவா என்னைப் படைக்கிறேன்

இதோ என் யாவும் தாரேன்

உந்தன் மாநேசம் எந்தனைபந்திப்பதினால்

என் நேசம் பாசம் யாவையும்

இதோ அங்கீகரியும்

உம்மால் காக்கப் பட்டென்றும்

நான் நிலைத்திருப்பேன்

பல்லவி

ஜெயம் ஜெயம் அல்லேலூயா

எனதெல்லாம் படைத்தேன்

பூரண இரட்சிப்படைந்தேன்

மீட்பர் இரத்தத்தால்

சரணம்-2

என் மனம் சித்தம் யாவுமே

சந்தோஷமாய் நான் தாரேன்

பூரணமாய் சுத்தம் செய்யும்

தீமையை நீக்கும்

தாரேன் என் முழு ஜீவனை

கேளும் என் விண்ணப்பத்தை

உம் சொந்தம் ஆனதால்

இப்போ நான் படைக்கிறேன்-ஜெயம்

சரணம்-3

தேவா நான் உம் ஏவுதலால்

பூசையாய் படைக்கிறேன்

இரத்தத்தால் வாங்கப்பட்டதால்

நம்பி ஜீவிப்பேன்

நேச சர்வ வல்லவரே

எனக்கும்மைக் காட்டுமேன்

மரித்தும்மை பார்க்கும் மட்டும்

பாதை காட்டுமேன்-ஜெயம்

No comments: